வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலுக்கு உண்டு, அந்த
சிறப்பம்சங்கள் ...
* கோவிலில் உள்ள நந்தி சிலையானது முழுவதும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்...
* 1003 வருடங்கள் ஆனாலும் பழமை மாறாமல் இருப்பது இன்னொரு பெருமை.
* ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டு, நாணயம், மற்றும் அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலை, ஆகியவற்றில் நம் பெரிய கோவில் உள்ளது, இவை மூன்றிலும் இடம்
பெற்ற ஒரே கட்டிடம், தஞ்சை கோவில் மட்டுமே.
* இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல்,பண்பாட்டு நிறுவனத்தால் உலகபாரம்பரிய சின்னமாக
அறிவிக்கப்பட்டது.
* இக்கோவிலின் மிகப்பெரிய சிறப்பு, இக்கோவிலின் மேல் இடம்பெற்றுள்ள கோவில் கலசம்,
கீழே உள்ள சிவன் லிங்கத்திற்கு துல்லியமாக நேர்க்கோட்டில் அமைந்திருப்பது...
* இங்குள்ள சிவ லிங்கம் மூலஸ்தானத்தின் நிலை கதவைவிட பெரிதானது, அப்படியானால்
லிங்கத்தை வைத்தபிறகு கோவிலை கட்டினார்களா, அப்படி இறந்திருக்க முடியாது காரணம் ஆகம விதிப்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் லிங்கத்தை கடைசியகதான் பிரதிஷ்டை செய்திருக்கவேண்டும்.அப்படியானால் அவர்களுக்கு லிங்கத்தை சிறிதாக்கி உள்ளே எடுத்துசென்று பெரிதாக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும்.
* இங்குள்ள முருகன் சன்னதியில் உள்ள சிற்பங்களில், மெல்லிய முடி மட்டுமே செல்லும்
அளவுக்கு சிறிய துளைகள் செய்துள்ளார்கள்.
இன்னும் நமக்கு தெரியாமல் எத்தனை ரகசியங்களை மறைத்து வைத்திருக்குறார்
அந்த ராஜ ராஜ சோழன்..

No comments:
Post a Comment